லிபியா கடலில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பல்! 61 பேர் உயிரிழப்பு
லிபியா கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
லிபியாவின் Zuwara நகரிலிருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த 25 பேர் லிபியாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, மத்திய மத்தியதரைக் கடல் உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது.