திருமணத்தில் எஞ்சிய உணவு; வைரலாகும் பெண்ணின் செயல்!
வங்காள தேசத்தில் உள்ள பெண் ஒருவர் தனது தம்பியின் திருமணத்தில் எஞ்சிய உணவுகளை எடுத்துகொண்டு வந்து இரவில் ரயில் நிலையத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமண உடையில் ரனாகத் ரயில் நிலையத்தில் வாளிகளில் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பியிருக்க காகித ப்ளேட்களில் உணவு பரிமாறியிருக்கிறார் பாப்பியா கர். சுமார் இரவு ஒரு மணி அளவில் நடந்த இந்த நிகழ்வை திருமண புகைப்படக்காரர் பதிவு செய்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தை அவர் முகநூலில் பதிவிட்ட நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள், அப் பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், தங்களது திருமணத்திலும் இதே போன்று செய்யப்போவதாகத் கூறியுள்ளனர்.
அதிலும் ஒருவர் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியாது, ஆனால் என் திருமணத்தில் இதே போன்று உணவு தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்கப்படும், என்னுடைய பதின் பருவத்திலிருந்து நான் இதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.