யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு நாளை சட்டத்தரணிகள் வரமாட்டார்கள்! முக்கிய அறிவிப்பு
வடக்கில் நாளையதினம் இடம்பெறவுள்ள ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் நாளைய தினம் (25-04-2023) யாழ் வலய நீதிமன்றங்களில் ஆஜராகமாட்டார்கள் என அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாழ்ப்பாண வலய தலைவரும் யாழ் நீதிமன்ற சட்டத்தரணி கள் சங்கதலைவருமான பாலசுப்பிரமணியம் தவபாலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் ஹர்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஹர்த்தாலிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ் வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய 5 நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் ஆஜராகாது பூரண ஆதரவினை இவ் ஹர்தாலிற்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.