கொரோனா தொற்றால் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நெடுந்தொலைவு ஒட்டம்!
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தலைத்தூக்கத் தொடங்கியுள்ள நிலையில் வூஹான் நெடுந்தொலைவு ஓட்டம், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இன்று (24) நடைபெறவிருந்த வூஹான் நெடுந்தொலைவு ஓட்டமே இவ்வாறு கொரோனா தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வூஹான் நெடுந்தொலை ஓட்டப் பந்தயத்தில் 26,000 பேர் கலந்துகொள்ள இருந்தனர். ஒட்டப் பந்தயத்திற்கு பதிவுசெய்தோரின் முன்பதிவுக் கட்டணத்தைத் திரும்பத் தருவதாக ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
சீனாவில் கடந்த 24 மணி நேர இடைவெளியில் மேலும் 26 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு (2022) பெய்ச்சிங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் செயல்படுவதாகச் சீனா தெரிவித்தது.
மக்களிடையே பரவலாக கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவது, குறிப்பிட்ட இடங்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.