அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச நிறுவனம்
ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் இன்று முதல் குறைத்துள்ளது.
விலை
இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பு தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பா 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி 174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
278 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.