குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான்
குரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக உள்ளன. இவர்கள் வாழ்நாள் முழுதும் குரு பகவானின் சிறப்பு அருளை அனுபவிக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
சிவ பெருமானின் அம்சமான குரு பகவான் மேஷ ராசிக்காரர்கள் உடனிருந்து அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி, வளமை என அனைத்து வித செல்வங்களையும் அளிக்கிறார். இவர்களின் நேர்மை, துணிச்சல் ஆகியவற்றை பாராட்டி குரு பகவான் எப்போதும் இவர்கள் உடனிருந்து அருள் பொழிகிறார்.
கடகம்
கடக ராசியில் குரு உச்சத்தில் இருப்பதாக கருதப்படுகிறார். இதன் காரணமாக, கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். குரு அருளால் இவர்களுக்கு வேலையில் முன்னேற்றம், புதிய பொறுப்புகளைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி என வாழ்க்கை முழுதும் பல வித நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குரு பெயர்ச்சி காலங்களில் இவர்கள் அதிகப்படியான நன்மைகளை பெறுகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே இயற்கையான பொருத்தம் உள்ளது. இதன் காரணமாக, குரு பகவானின் சிறப்பு ஆசிகள் சிம்ம ராசிக்காரர்கள் மீது நிலைத்திருக்கும். குருவின் அருளால் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருப்பார்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். குரு பெயர்ச்சி ஆகும்போதெல்லாம் அதிக நன்மைகளை அடைவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. இதன் காரணமாக குரு பகவானுக்கு பிடித்த ராசிகளிலும் துலாம் ராசிக்கு சிறப்பு இடம் உள்ளது. குரு பகவானின் அருளால் இவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும், செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இதன் காரணமாக குரு தனுசு ராசிக்காரர்கள் மீது சிறப்பு ஆசிகளைப் பொழிகிறார். குருவின் ஆசியால் தனுசு ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிக்கிறார்கள்.
மீனம்
குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக உள்ளார். ஆகையால், மீன ராசிக்காரர்களுக்கு எப்போது, குரு பகவானின் விசேஷ அருள் கிடைக்கும். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும், செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது. அவர்களது கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை குரு பகவான் எப்போதும் அளிப்பார்.