டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்தியாவின் இரு நட்சத்திர வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பார்படாஸில் நடந்த உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
உலக கோப்பை இறுதி போட்டியில் கோஹ்லி 76 ஓட்டங்களை பெற்றதால் ஆட்ட நாயகனாகவும், தென்னாப்பிரிக்காவிடம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2011 க்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார்.
டி20 சர்வதேச ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் 37 வயதான ரோஹித் மற்றும் 35 வயதான கோஹ்லி முறையே முதலிடத்திலும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.