சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் இந்த 10 விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
இப்போது இருக்கும் அவசர உலகில் உணவை சாப்பிடக்கூட அவசரம்தான். சமைப்பதில் கூட குறுக்குவழியா என்றால் அதற்கு குக்கர்களின் விசில் சத்தம்தான் சாட்சி. அப்படி குக்கரின் சமைத்து சாப்பிடுவதால் பல்வேறு தீமைகளை பெறக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய்க்கும் குக்கர் சாதம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி சாதத்தை வடிப்பதில் தொடங்கி சாப்பிடுவது வரை பல விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.
மேலும், சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பு போட்டு சூடாகப் பருகினால் பித்தம் அகலும். சூட்டால் கண் எரிச்சல் இருந்தால் அதுவும் சரியாகும். அதுவே ஆறிப்போன கஞ்சியை குடித்தீர்கள் எனில் வாயுத்தொல்லையால் அவதிப்படுவீர்கள்.
இதேவேளை, சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பு பாதிப்பு இருத்தால் நீங்கும்.
சிலருக்கு சாதம் சூடாக சாப்பிட பிடிக்கும். அதற்க்காக கொதிக்க கொதிக்க இருக்கும் சாதத்தை சாப்பிடக் கூடாது. மிதமான சூட்டில்தான் சாப்பிட வேண்டும். அதேபோல் சில்லென ஆறிப்போன சாதத்தை சாப்பிடுவதால் கீழ்வாதம், மூட்டுவாதம் போன்ற பிரச்னைகளை சந்திக்கக்கூடும்.
மேலும், சாப்பிடு மீதி இருக்கும் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடும்போது பிரியாணி கூட தோற்றுப்போகும். உழைக்கும் வர்கத்தினருக்கு களைப்பு தெரியாமல் நீண்ட நேரம் வேலை செய்யவும் பழையது உதவும். குறிப்பாக வெயில் காலத்தில் குள்ர்ச்சி தரும். இது சுவையில் மட்டுமல்லாது வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டுவலி, தோல் நோய்களுக்கும் மருந்தாகும்.
இதேவேளை, பழைய சாதத்தில் நேரடியாக தயிர் பயன்படுத்தி சாப்பிடக்கூடாது. மோராகக் கலந்து ஊற்றிதான் சாப்பிட வேண்டும்.
வெதுவெதுப்பான சூட்டில் சாதம் இருக்கும்போது பசும்பாலை ஊற்றி உண்டால் தண்ணீர் தாகமே எடுக்காது. பித்தம் இருந்தாலும் நீங்கும். அதுவே பச்சரிசி சாதமாக இருப்பின் வாதம், பித்தம் இரண்டுமே நீங்கும்.
நம் செல்லும் விருந்துகளில் உண்ணும் உணவில் கண்டிப்பாக மோரும் இருக்கம் அதற்கு என்ன காரணம் தெரியுமா..? சாதத்தில் மோரை ஊற்றி சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். எனவேதான் சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு என ஒரு புடி புடித்தாலும் அவற்றை செரிமானிக்க இறுதியாக மோர் சாப்பிடாமல் எழுந்துவிடாதீர்கள்.
வாழையிலையில் சாதம் மிதமான சூட்டில் இருக்கும்போது போட்டு சாப்பிடும்போது அதிலிருக்கும் துவர்ப்பு சுவை பல நன்மைகளை சேர்க்கும்.
மேலும் மாதவிடாய் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு சிவப்பு அரிசி சாதம் மிகவும் நல்லது. வயிற்று பொருமலுக்கு சம்பா அரிசி நல்லது.