தமிழர் பகுதியில் கோர விபத்து... இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (07-04-2024) காலை 7.30 மணியளவில் பூநகரி வாடியடிச் சத்தியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் 52 மற்றும் 63 வயதுடைய இருவரே படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.