கொழும்பில் பிரபல பாடசாலை மாணவியை கடத்த முயற்சி; இவரை தெரியுமா?
கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறியுள்ளதாகவ்து, மாணவியின் , தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தாயார் அதிர்ச்சி
அடையாளம் தெரியாத ஒரு நபர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென உள்ளே நுழைந்து, சிறுமி அமர்ந்திருந்த பின் இருக்கையில் ஏறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு கூறியுள்ளார். மாணவியின் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார் தனது மகளை சந்தேக நபரிடமிருந்து விலக்கி, உதவி கேட்டு கத்தியபடி வாகனத்தை விட்டு வெளியேறிய நிலையில், சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் சீசீடிவி காட்சிகளில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கு அருகில் அதே நபர் சுற்றித் திரிவதைக் காட்டுவதாக கூறியுள்ள பொலிஸார், தகவல் தெரிந்தவர்கள் 011-2695411 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.