தீபாவளி நிகழ்வில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முக்கிய உரையாடல்! மனோ
ஜனாதிபதி மாளிகையில் தீபாவளி நிகழ்வில், தீபாவளியை தவிர ஏனையவற்றை உரையாடல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) முகநூல் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும், ( (Douglas Devananda) தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம். பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) சொன்னார்.
இன்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி சொன்னார். அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ, முன்னாள் எம்.பி.க்கள் சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51% உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்.