ஆளுநரின் அறிவுறுத்தலால் பருத்தி துறை பிரதேச சபையால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட கால அவகாசம் கொடுக்கப்படும் என பருத்தி துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் நேற்று இடம்பெற்றது.
இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான அனுமதிகள் சபையிடம் பெறப்பட்டது.

வடடார அலுவலர்களுக்கான 20 வீத கொடுப்பனவுகள் வழங்குவதற்கான அனுமதி தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் சபையிடம் நிதி இல்லை என்றும் அதனை உரிய தரப்புக்கு அறிவிப்பது என்றும், கட்டிட அனுமதி பெறப்படாமல் கட்டிடங்கள் கட்டியோருக்கு அதற்கான வியாபார அனுமதி வழங்க வேண்டாம்.
என்று ஆளுநரிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையால் ஒருவருடத்திற்குள் கட்டிட அனுமதி பெறப்பட வேண்டும் என்றும்,மருதங்கேணி பகுதியில் சபை அனுமதி இன்றி தனியார் நிதி நிறுவனம் ஓன்று இயங்குவதாகவும் அதனை ஆய்வு செய்து சபையால் நடவடிக்கை எடுப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன