களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது
தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதற்கமைய, பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (2023.12.11) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடம் டிசம்பர் 2023.12.18 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டமையினால் கடந்த திங்கட்கிழமை களனிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
அதன்படி, அனைத்து மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (2023.12.05) காலை 8.00 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.