யாழில் இடம் பெற்ற கத்திக்குத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இளவாலையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் நள்ளிரவு 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்மீது கத்திக் குத்தும் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து இருவரை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.