பொலிஸாரை விரட்டியவர் இன்று அவர்களிடம் தஞ்சம் ; கஜேந்திரகுமாரை கிண்டலடித்த கம்மன்பில
பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தற்போது பொலிஸாரைத் தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்துப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன் இது கஜேந்திரகுமாருக்கு வெட்கக்கேடான விடயம் எனவும் கம்மன்பில கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இனவாதத்தால் அரசியல் செய்யும் கஜேந்திரன்
வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களால் கஜேந்திரகுமார் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் .
கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முற்கூட்டியே பெருமளவு பொலிஸாரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.
கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிஸாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும் எனவும் உதய கம்மன்பில எம்.பி கூறினார்.