சிறைச்சாலைக்குள் வாழைப்பழ சீப்பில் மறைந்து வைத்து கொண்டுவரப்பட்ட மர்ம பொருள்!
களுத்துறை சிறைச்சாலையில் வாழைப்பழ சீப்பில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (29-09-2023) மாலை 03.15 மணியளவில் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களை பார்வையிட வந்த நபர் ஒருவர் சந்தேக நபர்களுக்கு வழங்குவதற்காக உணவை எடுத்து வந்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களில் 03 மற்றும் 04 அங்குலங்கள் கொண்ட 16 உரிஞ்சு (ஸ்ட்ரோ) குழாய்களுக்குள் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருட்களை கொண்டு வந்த சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையால் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.