அதிவேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! களுத்துறையில் சம்பவம்
களுத்துறை - மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு (14-02-2024) 11.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளம் குடும்பஸ்தர் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 25 வயதான கிஹான் மதுசங்க லக்மால் என்ற திருமணமானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.