அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்... 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்!
மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூன்று மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் அதிவேகமாக பயணித்த போது வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு எருமை உயிரிழந்துள்ளதுடன், 4 எருமைகள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 5 இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, 5 இளைஞர்ளும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.