கொழும்பில் உள்ள பகுதியொன்றில் திடீரென பரவிய கரும்புகை: வெளியான காரணம்!
கொழும்பில் உள்ள கடுவலை - பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காணியில் தீப்பரவியதால் பெருமளவில் கரும்புகை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் குழாய்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காணியில் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது.
தீயினால் நீர் வழங்கல் சபையின் பல நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயினால் எழுந்த பெரும் கரும்புகை அதனை அண்டிய பகுதிகளுக்கு பரவிய நிலையில், அந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக தெரிவித்தனர்.