வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? தூங்கும் போது இதை செய்தாலே போதும்
ஜோதிடத்தின் படி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு மூலம் வீட்டின் வருமானத்தை அதிகரிக்கும் என உங்களுக்கு தெரியுமா? கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருளாகும்.
சமையலுக்கு மட்டுமின்றி நமது சில மருத்துவ பிரச்சனைகளுக்கும் அது தீர்வு கொடுக்கும். குறிப்பாக பல் எனாமல் பிரச்சனைகளுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதே போன்று வாஸ்து சாஸ்திரங்கள் படியும் கிராம்பு சில பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. அது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
வாஸ்து படி இரண்டு கிராம்புகளை மட்டும் தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஏற்ற வழி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இரவில் கெட்ட கனவுகள் வருகிறதா அதற்கும் கிராம்பு சிறந்த தீர்வாகும். கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கனவு வராது, நல்ல தூக்கம் வரும் எனவும் நம்பப்படுகிறது.
மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தாலும், கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து நல்ல பலன்களை பெறலாம். இதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி, நிதி நிலை உயரும் எனவும் சொல்லப்படுகிறது.