குரு பகவானால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது
குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.

குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து சில ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
