இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஜனவரி 2025 முதல், 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக சென்றுள்ளனர்.
இஸ்ரேல் வேலைவாய்ப்புகள்
இதற்கிடையில், இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றிய 41 நபர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (10) பணியகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 177 பேர் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக வெளியேறத் தயாராகி வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து வெளியேறி ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு தொழிலாளர்கள் இடம்பெயரும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் காணப்படுவதாகவும், அதன்படி, இஸ்ரேலில் வேலை தேடுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.