வெளிநாட்டில் பரவிவரும் அரிய வகை நோய்! 48 மணித்தியாலத்தில் மரணம் நிச்சயம்
ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகின்றது. கடந்த 02-06-2024 ஆம் திகதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரியவந்துள்ளது.
ஐப்பான் நாட்டில் எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்தது.
இந்த நோய் உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது. மனிதர்களை 48 மணித்தியாலத்தில் கொல்லும் சக்தி படைத்தது. இந்த நோயானது ஜப்பானில் பரவி வருகின்றது.
இதன் பாதிப்பால், வீக்கம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும். சில பேருக்கு, காலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும்.
இதன்பின்னர், சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.