மாங்குளம் விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு
மாங்குளம் ஏ9 வீதியில் நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்
இந்த விபத்தில் 38 வயதான பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்றைய இருவர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.