பிரான்ஸில் யாழ் இளைஞனின் உயிரை பறித்த விபத்து; தப்பியோடிய சாரதி
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பின் புலமாக கொண்ட 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 7ம் திகதி பிரான்ஸின் செய்ன்-எட்-மார்னே (Seine-et-Marne) Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 22 வயதுடைய இந்த இளைஞன் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் என்றும், சமீபத்திலேய தனது குடும்பத்துடன் மித்ரி நகரில் குடியேறியிருந்தார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தப்பியோடிய சாரதி
உயிரிழந்த இளைஞன் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்ற நிலையில் , பொலிசாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், யாழ் இளைஞன் உயிரிழந்த சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.