அடாவடி செய்த யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு அதிரடி இடமாற்றம்!
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்திருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடமாற்றமானது இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் நிலையங்களிலும் காவாலி செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தகவலும் அம்பலமாகியுள்ளது.