யாழ்ப்பாணம் - சென்னை விமான பயணிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
யாழ்ப்பாணம் - சென்னைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் விமானத்தில் பயணிகள் நிறைந்திருந்ததாக யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர ஊட்டம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை கடந்த 12 ஆம் திகதி மீண்டும் தொடங்கிய பின் நேற்று நாள் எட்டாவது விமானமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானத்தில் 60 பயணிகள் பயணித்ததாகவும், பின்னர் இந்த விமானத்தில் 48 பயணிகள் சென்னைக்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் அலையன்ஸ் எயார் ATR-72 ரக விமானத்தில் 60 பயணிகள் அமரக்கூடிய வசதி உள்ளது என தெரிவித்துள்ளார்.