யாழ் புலம்பெயர் தமிழர் தாயகத்தில் திடீர் உயிரிப்பு
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நித்திரை கொள்ள சென்றவர் உயிரிழப்பு
இந்த நபர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்து மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு நித்திரை கொள்ள படுக்கையறைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரை விட்டெழவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோதே அவர் உயிரிழந்தமை தெரியவந்தது எனவும் பொலிஸாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.