யாழில் பயங்கர விபத்து சம்பவம்: 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் இன்றையதினம் (17-09-2023) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, 2 குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாயாரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கிளிநொச்சி - பூநகரி - 4ம் கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக காற்று கட்டுப்பாட்டை இழக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீதியில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.