யாழில் தொடரும் அபாயம்! மற்றுமொரு நபரை தாக்கிய கொடிய நோய்
யாழில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சைக்காகச் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 15 ஆம் திகதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் யாழ்.மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 நாட்களில் இருவர் மலேரியா தொற்றாளர்களாக யாழில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மலேரியே நோயால் பாதிக்கப்பட்ட இருவரும் தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.