யாழ் - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் புகைப்படங்கள்!
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பதுளை மற்றும் ஹதரலியத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கெக்கிராவையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் பயணித்த பஸ் ஒன்று குறித்த லொறியை கடந்து முன்னோக்கிச் செல்வதற்கு முயன்ற போது எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி பின்னர் லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களது சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.