யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து... சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குடுமபஸ்தர்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் துன்னாலை வடக்கை சேர்ந்த 39 வயதான நாகசார பாலச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.