இலங்கையில் மீண்டுமொரு துப்பாக்கி பிரயோகம்: ஒருவருக்கு நேர்ந்த நிலை
Police
Jaffna
Arrest
Shooting
Gun Shot
Ariyalai
By Shankar
யாழில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்தபோதும் நிறுத்தாமல் சென்றதனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25-12-2021) மாலை யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தார். அவர் பொலிஸ் காவலில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US