யாழ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது
யாழ்ப்பாணம் அல்லிப்பிட்டி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் விபரம்
இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காரில் பயணித்த நால்வர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு வாகனங்களும் அதி வேகமாக சென்றதே விபத்திற்கான காரணம் என தெரிவித்த ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.