இலங்கையர்களுக்கு தொழில் விசாக்களை வழங்க தயாராகும் இத்தாலி
இலங்கையர்களுக்கு மறுபடியும் தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இத்தாலி அரசாங்கம் விசா வழங்குவதை நிறுத்தியிருந்தது. இத்தாலிய விசா தடை இலங்கைக்கும் பாரிய பிரச்சினையாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இத்தாலி அரசாங்கம் விசா தடையை நீக்கியுள்ளது, இப்போது எங்களுக்கு விசா வசதிகளை வழங்குகிறது. தொழில் விசாக்களை வழங்கும்போது ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் தேவைப்படுகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.