இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!
கொரோனா தொற்றின் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் நிபந்தனைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கையில் நாளாந்தம் சுமார் 10 கொரோனா தொற்றுக்குள்ளாவதாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்காததால், சமூகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் இன்றைய நாட்களில் பரவி வரும் இன்புளுவன்சா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.