இவர்கள் கால பைரவரை வழிபட்டால் நன்மையாம்
சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். இவர்களை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம்.
கால பைரவர் ரூபம்
அனைத்து சிவன் கோவில்களிலும் கால பைரவர் அல்லது பைரவர் சன்னதி நிச்சயம் அமைந்திருக்கும். வடகிழக்கு திசையில், ஆடை இல்லாமல் நின்ற கோலத்தில் காட்சி தருவார்.
நாகத்தை பூணூலாகவும், பிறையை தலையிலும் அணிந்து காட்சி தருவார். சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவரக் பைரவர்.
பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக் கூடியவர்.
இவரின் அருள் இருந்தால் அஷ்டமா சித்திகமும் கைகூடும்.
காலத்தின் கடவுள் என சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியை மாற்றும் சக்தி இவருக்கு உண்டு.
நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வரரின் குரு ஆவார்.
கால பைரவரை வழிபடும் முறை
கால பைரவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதி ஆகியவை ஆகும்.
இந்த நாளில் கால பைரவர் கோவில் அல்லது சிவன் கோவில்களில் உள்ள பைரவர் அல்லது கால பைரவர் சன்னதிக்கு சென்று வழிபட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கால பைரவருக்கு செளமுக விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் உகந்ததாகும். செளமுக விளக்கு என்பது நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்காகும்.
இதில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மிளகு சேர்த்த உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
யாரெல்லாம் பைரவரை வழிபட வேண்டும்
பில்லி, சூனியம், மாந்ரீகம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கட்டவர்கள், தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் வீழ்ச்சி, பொருளாதார சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள், நவகிரக தோஷங்கள், சனியின் பிடியில் சிக்கி சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கால பைரவர் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வது சிறப்பானதாகும்.