எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புகள் குறித்த அறிக்கையை வழங்க நடவடிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீப்பற்றல் காரணமாக ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட நடவடிக்கை.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்ததால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடலஸ்ஸர் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளோடு அவற்றை மீள் உருவாக்க ஆகவும் செலவினையும் கணக்கிட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அதன்படி இரண்டு முன்னணி பேராசிரியர்கள் தலைமையில் இந்த மதிப்பீடுகள் இடம்பெற்றன.
இந்த மதிப்பீடுகளின் முதற்கட்ட அறிக்கையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.