குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது.
அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து 4 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல் மற்றும் அசெர் உயிரிழந்துள்ளனர்.
Palestinian man who went to get birth certificates, returned tonfind his wife and children murdered... pic.twitter.com/3qxDLe8Rji
— Southland Post (@SouthlandPost) August 14, 2024
கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் கணொளி போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.