மீண்டும் தள்ளிப்போகின்றதா விஜய் இன் பதவியேற்பு விழா; தவிப்பில் தமிழக மக்கள்!
தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பில் உள்ள நிலையில், நேற்று மாலை விஜய் முதல்வராவது நிச்சயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நடந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தவெக-விற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற நிலையில் விஜய் இன் பதவியேற்பு விழா இன்று நடக்குமா என்ற சந்தேகத்தை இந்திய ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
இது தொடர்பில் இந்திய ஊஅகங்க்கள் கூறியுள்ளதாவது,

விசிக ஆதரவு உறுதியானால் விஜய் பதவியேற்பு
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தவெக-விற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற நிலையில் , டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் காமராஜ் தவெக-விற்கு ஆதரவு அளித்தாக வெளியான செய்தியும், தினகரன் குதிரை பேரம் நடக்கிறது என குற்றச்சாட்டு முன்வைத்தது மூலம் மொத்த கதையும் மாறியுள்ளது
இந்த நிலையில் தவெக கட்சியின் ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று விஜய்-க்கு ஆதரவு அளிக்கப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கும் வேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கம் வெள்ளிக்கிழமை (மே 8) முடக்கப்பட்டது.
யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான மருந்துகள் தீக்கிரை
இதற்கு 2 காரணங்கள் முன்வைக்கப்படுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் உயர்மட்டக் கூட்டம் நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தமிழக அரசியலின் அடுத்தகட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பு கோரிய வடிவத்தில் ஆதரவுக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக முடியாமல் தவிக்கும் விஜய்
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
விசிகவின் ஆதரவு உறுதியானால், 118 ஆதரவு உறுதியாகி, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும்.
இன்று நடைபெறும் விசிக உயர்மட்டக் கூட்டத்தின் முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தமிழக மக்கள் அனைவரும் விஜய் இன் பதவியேற்பை காண பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.