கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் முகநூலில் இப்படியா?
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தனது தனிப்பட்ட முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டு (ஹேக்) அரசாங்கத்தை விமர்சித்து சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற்து.
இந்த நிலையில் தனது முகநூலில் , அவ்வாறான பதிவுகளை வெளியாவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பு ஏதும் இல்லை என அவர் கூறியுள்ளார். அத்துடன் பல நாட்களாக தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இது குறித்து தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
கணக்கை முழுமையாக மீட்க முடியும் எனவும், எனினும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம் தனது கணக்கை ஓவர்டேக் செய்த நபரால் பல பதிவுகள் பகிரப்பட்டதாகவும், அமைச்சரை விமர்சித்து இந்த பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் பகிர்ந்த பதிவுகள் குறித்து எந்தவித ஆய்வும் இன்றி கருத்து தெரிவித்தவர்கள், மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.