15 பேர் கொண்ட அமைச்சரவை 20 ஆக உயர்கிறதா....!
புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
மேலும், அமைச்சரவையில் தற்போது 20 பேர் மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர்கள் 10 பேரில் இருந்து 15 பேர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள அனைவரும் இளம் எம்.பி.க்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, அலி சப்ரி மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர்களான கலாநிதி. ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, காஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க, டி.வி.சானக, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், ஜானக வகும்புர மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படக் கூடும்.
அதே சமயம் , தமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் நேற்று இரவு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கலாநிதி பந்துல குணவர்தன, காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம்.சந்திரசேன, ஜனக பண்டார தென்னகோன், சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் ஜனாதிபதிக்கு இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதிய அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லை என டலஸ் அழகப்பெரும மற்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் இன்று ட்வீட் செய்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சில் பல அமைச்சர்கள் பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு பேராசிரியர் சரித ஹேரத், பிரமித பண்டார தென்னகோன், டிலான் பெரேரா மற்றும் எஸ்ஏடி ஜகத் குமார ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
பிரதமர் தவிர அமைச்சரவை, பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 3 அன்று ராஜினாமா செய்தது. அதன்பின் மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.