இந்த காலத்தில் இப்படியுமா? பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள் செய்த செயல்(Photos)
இராகலை மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலய மாணவர்களின் செயல்பாடானது பிற பாடசாலை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இராகலை மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலய மாணவர்கள், கா.பொ.த சாதாரண தர பரீட்சையை அருணோதய இந்து கல்லூரியில் எழுதி இருந்தனர்.
இவ்வருடம் O/L பரீட்சை எழுதிய மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சை எழுதிய பாடசாலையை பரீட்சை முடிந்த பின்னர் சுத்தப்படுத்தியுள்ளனர்.
அதோடு பரீட்சை விதிமுறைகளை நேர்த்தியாக பின்பற்றியமை, மேற்பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.
கா.பொ.த சாதாரண தர பரீட்சை நேற்றையதினம் நிறைவு பெற்ற பின்னர் அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டப சூழலையும், தாம் பயன்படுத்திய கழிவறைகளையும் மாணவர்கள் சுத்தப்படுத்தியுள்ளனர்,