22 மணிநேரம் வேலை ; ஊதியம் கேட்ட ஊழியர் மீது இரும்புக் கம்பியால் தாக்குதல்
நாளொன்றுக்கு 22 மணிநேரம் வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட 800 ரூபா பணம் போதாது என கூறிய நபர் ஈவிரக்கமின்றி சுயநினைவு இழக்கும்வரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிக்கு அமர்த்திய நபரே இவ்வாறு ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. குறித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
42 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்ள்ள நிலையில் , தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர் ஹங்வெல்ல துன்னான பிரதேசத்தில் இரும்பு துண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.