பரபரப்பான இறுதி ஓவரில் கொல்கத்தா அணி திரில் வெற்றி! சோகத்தில் டெல்லி அணி
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி இறுதி ஓவரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி மற்றும் டெல்லிகள் மோதின.
இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வ் ஷா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஷிகார் தவான் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வருண் சக்ரவர்த்தி சூழலில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், டெல்லி அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வருண்சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 26 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யரும் இணைந்து சிறப்பாக ஆடிவந்தனர். இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியாமல் டெல்லி அணி திணறியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் வெளியேற, அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கேப்டன் இயன் மோர்கன், சகீப் அல் அசன், சுனில் நரைன் ஓட்டங்கள் எதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, அஸ்வின், அடுத்தடுத்து 4 பந்துகளை சிறப்பாக சிறியதால் போட்டி சற்று கடினமான சென்றது. கடைசி இரண்டு பந்தில் 6 ஓட்டம் தேவை என்ற போது, ஐந்தாவது பந்தில் திரிப்பாட்டி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.