யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!
யாழ் - தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (13.01.2024) தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மற்றும் பிரமந்தனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
தடையை பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.