சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அசத்திய இலங்கை வீர, வீராங்கனைகள்!
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்ளையும் 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மே 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் உலக மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பதக்கங்கள் ஊடாக இலங்கை சர்வதேச ரீதியில் 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற வீர, வீராங்கனைகள் நிகழ்த்தியுள்ளனர்.
மேலும், இந்த சாதனையை கௌரவிக்கும் முகமாக வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, சண்முகநாதன் சஞ்சயன் , தட்சணாமூர்த்தி மகிஷா ,ஜெயவர்த்தன செவுமினி இமேஷா , குமார் கிருசாந்தன் , முருகன் வினோத், சிவகுமார் தர்ணிகா, ராமநாதன் திவ்யா ஆகிய வீர, வீராங்கனைகளே பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமது பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.