சர்வதேச விருது பெற்ற இலங்கை பெண் ஊடகவியலாளர்!
இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர் திலினி நதிஷா ரணசிங்க, சர்வதேச விருது பெற்றுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற International Iconic Awards -2024 எனும் விருது வழங்கல் விழாவில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
The Most Influncing & Iconic Role in Media News Anchor and News Reporting of the year விருது திலினி நதிஷா ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய மோசமான காலநிலையின் போது சிறப்பாகச் செய்தி சேகரித்து வெளியிட்டமைக்காக திலினி நதிஷா ரணசிங்கவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.