வாழைச்சேனையில் மக்களுக்காக வியாழேந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை!
வாழைச்சேனையில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் பொது மக்களின் நன்மை கருதி குடிநீர் வழங்கும் முகமாக நீர்க் குழாய் பொருத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறிந்த நிகழ்வை, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் கொண்டையன் கேணியில் வைபவ ரீதியாக இன்றையதினம் (28-05-2024) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது, கோறளைப்பற்று பிரதேசத்தின் கும்புறுமூலை மற்றும் கறுவாக்கேனி ஆகிய கிராமங்களிலும் முதற் கட்ட நடவடிக்கையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.நவநீதன்,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நிலையப் பொறுப்பதிகாரி ம.மயூரன் மற்றும் பிரதேச இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
