சரத் பொன்சேகா உட்பட 11 பேருக்கெதிராக தடை உத்தரவு!
டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), ரீ.பி. ஜாயா மாவத்தை (டார்லி வீதி), ஒராபிபாஷா மாவத்தையிலிருந்து டெக்னிக்கல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக கோட்டை புகையிரத நிலையம் வரையில் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைவாக குற்றவியல் வழக்குச் சட்ட விதிகளுக்கு அமைய அதனைத் தடை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தடையுத்தரவை மீறுவோர் கைது
இத்தடையுத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரத்நாயக்க தரிந்து அமில உடுவரகெதர உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வுத்தரவை மீறுவது இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றம் என, குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடையுத்தரவை மீறுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.